ஈழத் தமிழர்களின் திரைப்படங்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை: தமிழ் தொழிலதிபர்
ஈழ தேசத்தின் வலிகளையும் அங்குள்ளவர்களின் வலி சுமந்த வாழ்க்கையையும் ஆவணமாக்கும் நோக்கிலேயே ஈழத் தமிழர்களின் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
இதற்கமைய, ஈழத்தில் உருவாகி வரும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று, கருடன் தயாரிப்பகத்தில் இருந்து வெளிவரும் முதலாவது படைப்பை தொடர்ந்து பல படைப்புக்கள் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றன.
இந்த திரைப்படம், இயக்குனர் கதிரின் இயக்கத்தில், கேமலின் ஒளிப்பதிவில், ஜெயந்தனின் இசையில் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கும் அல்விஸ் கிளின்டன் என 'அன்புள்ள' திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரின் உழைப்பில் உருவாகி வருகிறது.
அதேவேளை, திரைப்படத்தின் கருவினை எடுத்து பார்த்தால், ஈழத்தின் போர்க்களத்தில் நிகழ்ந்த காதல் கதைகளை தழுவி நிற்கின்றது.
இவ்வாறிருக்கையில், ஈழத் தமிழர்களின் திரைப்படங்கள் வெற்றி பெறாமை ஏன் என்னும் கேள்வி நம் யாவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், அவற்றின் நிழல்களை எடுத்துக்கூறும் முகமாக இந்த வருட இறுதியில் திரைக்கு வரவுள்ள 'அன்புள்ள' திரைப்பட அறிமுக விழாவில் உரையாற்றிய பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் உணர்வுபூர்வ உரையுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
