வெளிநாடொன்றில் இலங்கை மாணவிக்கு சிறைதண்டனை
வங்கிக்கணக்கு விபரங்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கை மாணவி ஒருவருக்கு சிங்கப்பூரில் புதன்கிழமை (01) மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றத்திற்காக அவருக்கு 1,100 சிங்கப்பூர் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தத் தவறினால், அவர் மேலதிகமாக மூன்று நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
22 வயதுடைய இலங்கை மாணவி ராஜாதி ராஜசிங்க மனமேந்திர படபடிலகே விஷ்வா மாதவி (Rajadi Rajasinghe Manamendra Patabadilage Vishwa Madavi) இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி
கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், தனது வங்கி உள்நுழைவு விவரங்களை தெரியாத ஒருவருக்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்குத் தூண்டியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 17 அன்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், புதன்கிழமை (01) தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
”தான் செய்த தவறிற்காக மிகவும் வருந்துவதாகவும், அந்த நேரத்தில் குற்றத்தின் தீவிரம் தனக்குத் தெரியாது என்றும் “ நிதி நெருக்கடி இருந்ததாகவும் அம்மா ஒரு இதய நோயாளி எனவும், அவருக்கு தன்னால் பணம் அனுப்ப முடியவில்லை,” என்றும் நீதிமன்றத்தில் குறைந்தபட்ச தண்டனையை கோரியுள்ளார்.
இதற்கமைய, சட்டவிரோத நோக்கத்திற்காக தனது வங்கிக் கணக்கு உள்நுழைவு விபரங்களை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



