இலங்கையில் கார்த்திகை மலரை அவமதித்த பிரபல காலணி நிறுவனம் - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு (Colombo) - வெள்ளவத்தையிலுள்ள காட்சியறை ஒன்றினுள் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகைப்பூவை அவமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு இந்த விடயங்களை எடுத்துச் சென்று உற்பத்தியில் இந்த சின்னத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே காட்சி அறையில் உள்ள குறித்த காலணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுக்கமாறும் தமிழர்கள் சார்பில் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
#ஈழத் #தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட கீழ்வரும் வகையிலான #பாதணிகளை, உற்பத்தி நிறுவனம் மீளப்பெற வேண்டுமென விநயமாக வேண்டுகின்றோம்!
— Kanagaratnam Sugash (@Sugashkanu) May 27, 2024
அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய #உற்பத்திப்… pic.twitter.com/D4kHv7EEac
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam