நாடளாவிய ரீதியிலான பணிபுறக்கணிப்புக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் னோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை தொடர்வதனாலேயே குறித்த போராட்டத்தினை முன்னெடுப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, குறிப்பாக தேசிய கல்வியியற் கல்லூரியை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துதல், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு தடையில்லா பதவி உயர்வு முறையை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
மேலும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் அவ்வப்போது கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கவில்லை.

அதனை வெற்றி கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, கல்லூரிகளை பல்கலைக் கழகமாக தரம் உயர்த்துவது தொடர்பில் வரைவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள வரைவு சட்டமானது தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam