நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
புதிய இணைப்பு
நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 07ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
20 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள குறித்த பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் வழக்கம் போல நடைபெறும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முதலாம் இணைப்பு
நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
விடுமுறை..
மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri
