அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம் (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நுவரெலியா - கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (26.02.2023) முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள், எதிர்ப்புகளைப் பதாகைகளை
ஏந்தியவாறு வெளிப்படுத்தி, கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




