இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இரண்டு வருடங்களில் வீட்டு உரிமைப் பத்திரங்கள்

Colombo Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Benat Oct 07, 2022 09:53 AM GMT
Report

நாட்டில் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களுக்கு வசதியான வீட்டு வசதிகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கவுள்ளது என  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

இரண்டு வருடங்களில் உரிமைப் பத்திரங்கள் 

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இரண்டு வருடங்களில் வீட்டு உரிமைப் பத்திரங்கள் | Sri Lankan Peoples Sri Lanka Economic Crisis

அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

எனவே, அடுத்த இரண்டு வருடங்களில் 30,000 உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுத் தொகுதிகள் நிர்மாணப் பணிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில் மீண்டும் நாட்டில் அபிவிருத்திப் போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கள் 

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இரண்டு வருடங்களில் வீட்டு உரிமைப் பத்திரங்கள் | Sri Lankan Peoples Sri Lanka Economic Crisis  

கொழும்பில் உள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க குறைந்தபட்சம் 200,000 அடுக்குமாடி குடியிருப்புகளை நாங்கள் நிர்மாணிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இந்த இலக்கை அடைய அமைச்சு ஏற்கனவே குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

திறைசேரி நிதியைப் பயன்படுத்தி சுமார் 260 நகர அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, மேலும் ஐந்து திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், “ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு” திட்டத்தின் கீழ் தனிநபர் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. பிரதேச செயலக மட்டத்தில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராம நிர்வாகி பிரிவுக்கும் ஒரு வீடு உட்பட 15,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US