அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் : பொதுமக்கள் நிலையோ கேள்விக்குறி..! லால்காந்த கவலை
பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் லால்காந்த கவலை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது.
ஆனால் இப்போது பார்த்தால் இந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் வாகனங்கள், ஆடம்பர உடைகள், உணவுகள் என்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதே போன்று பொதுமக்களுக்காக சேவையாற்றும் அதிகாரிகளும் எப்போதும் சுகபோகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் உயரவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் திண்டாட்டத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் லால்காந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan