திருகோணமலையில் கடற்படையினருக்கான பயிற்சி ஆரம்பம்!
இந்தியக் கடற்படையின் புகழ்பெற்ற பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் தரங்கிணி’ (INS Tarangini), திருகோணமலை துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிகள் நேற்று(27.02.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- இலங்கை நட்புறவை வலுப்படுத்த வேலைத்திட்டம்
இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நீண்டகால ‘நட்புறவுப் பாலங்களை’ (Bridges of Friendship) வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நெறியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (Defence Adviser) கொமடோர் ஆனந்த் முகுந்தன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த பயிற்சியின் ஒரு சிறப்பம்சமாக, பயிற்சியில் ஈடுபடும் இலங்கை கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் கப்பலுக்கு வருகை தந்திருந்தனர்.
அவர்கள் கப்பலின் உட்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வீரர்களின் பயிற்சிச் சூழலையும் நேரில் கண்டு களித்தனர். நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கப்பலின் கட்டளை அதிகாரி (Captain) கமாண்டர் நிதின் கஜ்ஜார், "இந்திய - இலங்கை இடையிலான ஆழமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவின் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய கடற்படைச் சூழலிலும், பாய்மரக் கப்பல் மூலம் வழங்கப்படும் அடிப்படைச் சீர்மியப் பயிற்சிகள் (Seamanship) ஒரு கடற்படை வீரரின் ஆளுமைக்கும், மன உறுதிக்கும் மிக அவசியமானவை.
பயிற்சிகள் ஆரம்பம்
இவ்வாறான பயிற்சிகளை இலங்கை கடற்படைக்கு இந்தியக் கடற்படை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இது இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து, திருகோணமலையில் துறைமுகக் கட்டப் பயிற்சிகளை (Harbour Phase) நிறைவு செய்யும் இந்த கப்பல், மார்ச் 2-ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.
அந்தப் பயணத்தின் போது (Sea Phase), இலங்கை கடற்படை வீரர்கள் நடுக்கடலில் கப்பலை இயக்கும் நேரடி அனுபவங்களைப் பெறவுள்ளனர். கடந்த 2004-ல் உலகைச் சுற்றி வந்த முதல் இந்தியக் கடற்படைக் கப்பல் என்ற பெருமையைப் பெற்ற ஐஎன்எஸ் தரங்கிணி, எதிர்வரும் மார்ச் 9-ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தனது பயிற்சிப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri