கடலில் வைத்து தமிழக கடற்தொழிலாளர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் (Photos)
கடற்தொழிலுக்காக சென்ற இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் - மல்லிப்பட்டினத்தில் இருந்து சதீஷ் ,ஆறுமுகம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று மதியம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே 15 மைல் தொலைவில் கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சாம்பல் நிற கப்பலில் வந்த 5 இலங்கை கடற்படையினர் தமிழக கடற்தொழிலாளர்களின் படகில் ஏறி கம்பு மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில் தமிழ் செல்வத்திற்குப் பலமான உள்காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடற்தொழிலாளர்கள் கடலில் விரித்திருந்த 300 கிலோகிராம் வலைகளை வெட்டி விட்டு விட்டு படகில் இருந்த கையடக்க தொலைபேசி, கயிறு, டார்ச்லைட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர்.
கடற்தொழிலாளர்கள் வலையினை தேடிப் பார்த்து விட்டு வலை கிடைக்காததால் இன்று காலை 09.30மணிக்கு நாகை மாவட்டம் - கோடிக்கரை சித்தர் கோவில் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
தமிழ்ச்செல்வம் என்பவருக்குப் பின்பக்கம் பலத்த உள்காயம் ஏற்பட்டமையால் காரணமாக நடக்க
முடியாமல் இருந்தமையாலும் மற்றைய மூவரையும்
நோயாளர் காவு வண்டியை வரவழைத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
