சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது (Photos)
கடல் வழியாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகில் தப்பி வர முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி வர உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் என இருவர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்றுள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருத்தல்
குறித்த இளைஞர் தமிழகத்திற்கு சென்று இரண்டு ஆண்டுகளானதால் வழங்கப்பட்ட விசா காலாவதியாகியுள்ளது.
விசாவை புதுப்பிக்க இளைஞர் இரண்டு முறை முயற்சித்தும் புதிப்பிக்க முடியாததால் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்.
இதனையடுத்து இளைஞர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி வர முடிவு செய்து ராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தொடர்பு கொண்டு தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் திரும்பி வர முடிவு செய்துள்ளார்.
இதன்போது இளைஞரிடம் இருந்து குறித்த கடற்தொழிலாளர் பணத்தை பெற்று கொண்டு படகில் இலங்கை அழைத்து வர முயற்சி செய்துள்ளார்.
இருவர் மீதும் வழக்கு பதிவு
இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு பொலிஸார் இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொலிஸார் இருவரையும் இன்று காலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகரசபை ஊழியர் உயிரிழப்பு |



