ஜப்பானில் இலங்கையர் ஒருவர் மரணம்! கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்!
இலங்கையர் மரணம்
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்கில் உள்ள ப்ரிபெக்சர் நகரில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளார்.
இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டோ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில், பணியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டதை அடுத்தே இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.
ஒருவர் விசாரணையில்
விசாமலுதேனகெதர தர்மதாச உபுல் ரோஹன தர்மதாச என்ற இலங்கையரே மரணமானவராவார்.
காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் அங்கு மரணமானார்.
சம்பவ இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.