கொழும்பில் காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் விபரீத முடிவு
கொழும்பு, ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சரத் குமார் என்ற 27 வயதுடைய நபரே நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹோமாகம, கலவிவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
பதிலளிக்காத காதலி
வேலை முடிந்ததும் காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார். ஆனால் காதலி பதிலளிக்காதமையினால் குறித்த இளைஞன் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த இளைஞன் எப்படித் தூக்கில் தொங்கத் தயாராகிறார் என்பதைத் தெரிவித்து பல புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தனது காதலிக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை ஹோமாகம மேலதிக மரண விசாரணை அதிகாரி மானெல் கமகேவினால் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
