இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
கோவிட் பெருந்தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் (18-06-2021) கோவிட் பெருந்தொற்று காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் பதிவான 54 கோவிட் மரணங்களில் 23 பேர் பெண்கள் எனவும், 31 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுக்கும் குறைந்த இரண்டு மரணங்களும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 9 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 43 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2534 ஆக உயர்வடைந்துள்ளது.