இளம் திறமையான இணைய ஊடுருவாளர்களுக்கு இலங்கை அரசு அங்கீகாரம்!
திறமையான இணைய ஊடுருவாளர்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. அதில் ஒருவர் பணம் விநியோக முறையை ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பேஸ்புக் பக்கம் சிறுவன் ஒருவனால் ஊடுருவப்பட்டதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவன் கண்டியில் வசிப்பவர் எனவும், எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவனுக்கு மன்னிப்பு வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த சிறுவன் சிறிது நேரம் என்னுடன் வேலை செய்திருந்தார். தபால் துறையின் பணத்தை வழங்குவதற்கான ஒரு முறையை ஒரு சிறுவன் ஊடுருவியதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த சிறுவனுக்கு பணத்தை மோசடி செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தது. எனினும், இந்த அமைப்பு பாதுகாப்பாக இல்லை என்று அதிகாரிகளை எச்சரிக்க விரும்புவதாக சிறுவன் கூறியிருந்தாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் சிறுவனை தண்டிக்கவில்லை. இந்த சம்பவங்கள் இலங்கையில் இத்தகைய திறமையானவர்கள் இருப்பதைக் காட்டியுள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
