இளம் திறமையான இணைய ஊடுருவாளர்களுக்கு இலங்கை அரசு அங்கீகாரம்!
திறமையான இணைய ஊடுருவாளர்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. அதில் ஒருவர் பணம் விநியோக முறையை ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பேஸ்புக் பக்கம் சிறுவன் ஒருவனால் ஊடுருவப்பட்டதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவன் கண்டியில் வசிப்பவர் எனவும், எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவனுக்கு மன்னிப்பு வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த சிறுவன் சிறிது நேரம் என்னுடன் வேலை செய்திருந்தார். தபால் துறையின் பணத்தை வழங்குவதற்கான ஒரு முறையை ஒரு சிறுவன் ஊடுருவியதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த சிறுவனுக்கு பணத்தை மோசடி செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தது. எனினும், இந்த அமைப்பு பாதுகாப்பாக இல்லை என்று அதிகாரிகளை எச்சரிக்க விரும்புவதாக சிறுவன் கூறியிருந்தாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் சிறுவனை தண்டிக்கவில்லை. இந்த சம்பவங்கள் இலங்கையில் இத்தகைய திறமையானவர்கள் இருப்பதைக் காட்டியுள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan