இலங்கை அரசு ஜப்பானுக்கு 5,896 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டிய நிலைமை
ஜப்பானிய அரசின் கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரக ரயில்( மோனோ ரயில் திட்டம்) திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்ததன் காரணமாக , 5 ஆயிரத்து 896 மில்லியன் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சு வருடாந்தம் வெளியிடும் அரச நிதி அறிக்கை தொடர்பான கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்திற்கான ஆலோசனை சேவைக்காக 5 ஆயிரத்து 896 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிதி கடந்த ஆண்டின் அரச நிதி நிலை அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பது கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.