பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி காலை வேளையில் பெண் ஒருவர் இரத்த காயங்களுடன் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பிரித்தானியாவில் உள்ளவர்களால் இலங்கையில் இயக்கப்படும் ஆயுதக் குழுக்கள்! அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்
பெண் படுகொலை
எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவிக்குழுவினர், குறித்த பெண் உயிரிழந்தமை உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 37 வயதான மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் அல்லது டேஷ்கேம் காட்சிகளை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri