காலி முகத்திடலில் இருந்த விசாலமான இலங்கைக் கொடி திடீர் மாயம்! செய்திகளின் தொகுப்பு
காலி முகத்திடலில் கட்டப்பட்டு இருந்த இலங்கையின் விசாலமான தேசியக் கொடி இன்று காலை ஏற்றப்பட்டவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன.
வருடத்தின் 365 நாட்களும் ஏற்றப்பட்டு இருக்கும் குறித்த கொடி இன்று காலை ஏற்றப்படாமல் இருப்பது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகிருந்தது.
எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த விமானப்படை செய்தித் தொடர்பாளர், இன்று காலை வழக்கம் போல் காலி முகத்திடலில் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகவும் ஆனால் மழை காரணமாக சிறிது நேரத்தில் மீண்டும் இறக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மழை பெய்யும் போது கொடிக் கம்பம் ஈரமாக இருப்பதால் தேசியக் கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,