தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்தொழிலாளர்கள்(Photos)
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த ஆறு கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய படகும் தமிழக கடலோர காவற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை
தாண்டி கடற்தொழிலிள் ஈடுபட வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்திற்கு இன்று அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
