எல்லை தாண்டிய இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக் கடற்படையினர் இன்றிரவு கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் இருவரையும் இந்தியக் கடற்படையினர் கைது செய்து நாகபட்டினம் துறைமுகம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் இருவரும் கரைக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக் கடற்படையினர் இன்றிரவு கைது செய்ததை இலங்கைக் கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் எல்லை தாண்டி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் மூவரை இலங்கைக் கடற்படையினர் மடக்கிப் பிடிக்க முயன்றபோது கடற்படையினரின் படகு, இந்திய மீனவர்களின் விசைப்படகுடன் மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
ஏனைய இரு மீனவர்களையும் இலங்கைக்
கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லைதாண்டி
மீன்பிடித்தார்கள் என்று குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக்
கடற்படையினர் இன்றிரவு கைது செய்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam