கனடா வாழ் குடும்பம் ஒன்று இலங்கையில் செய்த நெகிழ்ச்சி செயல்
இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை கனடா வாழ் குடும்பம் ஒன்று வழங்கியுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
57 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் வழங்கப்பட்டது. இதன் பெறுமதி 470 மில்லியன் ரூபாவாகும்.
தீவிர சிகிச்சை பிரிவு
சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கே தலைமையில் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒவ்வொன்றும் தலா 3 மில்லியன் ரூபாயாகும். 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam