பொப் மார்லி கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 'பொப் மார்லி' என்ற சாமிந்த தப்ரூ என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் எல்பிட்டிய பகுதியில் ஐவுது்த பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே மற்றும் பத்தரமுல்லை பகுதியில் வசிக்கும் சந்தேக நபர் ஆகஸ்ட் 31ம் திகதி கைப்பற்றப்பட்ட 290 கிலோ ஹெராயின் சம்பந்தப்பட்ட கடத்தல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் .
அவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிய நிலையில், பொலிஸார் அவரை கைது செய்ய தகவல் அளிக்க பொதுமக்களின் உதவியை நேற்று நாடினர். இந்நிலையில், சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.