இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் மலேசியாவில் கைது
ஹரக் கட்டா மற்றும் குடு சாலிடு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்படும் ஹரக் கட்டாவின் பிரதான உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிதிகம சுட்டி மற்றும் ஜிலே ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் மலேசிய நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் கைதுகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்காவிட்டாலும், உண்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் உண்மையாகவே கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் நேற்று மலேசியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் நீண்ட நாட்களாக டுபாயில் தங்கியிருந்து பின்னர் அவர்கள் டுபாயில் இருந்து மலேசியா சென்றதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இருவரும் தற்போது வழக்கறிஞர்கள் உதவியுடன் டுபாய்க்கு நாடு கடத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri