இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்துள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாகப் பந்துவீசியதால் ஐசிசி குறித்த அபராதத்தை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்குப் போட்டி கட்டணத்தில் சுமார் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தெரிவிப்பு
இதனிடையே, இலங்கை அணித்தலைவர் தசுன் சானக்க குற்றச்சாட்டுத் தொடர்பான குற்றத்தை ஏற்றுக்கொள்வதால், குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.