தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் அதிரடியாக கைது
போலியான தவல்களை வழங்கி மோசடியான முறையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றதாக இலங்கையைச் சேர்ந்த ஒருவரை திருச்சி மாநகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஆவணங்கள் இன்றி இந்திய கடவுச்சீட்டு விண்ணப்பித்து அதைப் பெற்றுள்ளார். இது குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கியூ பிரிவு மற்றும் உள்ளூர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருச்சி பொலிஸார் அவர் இந்தியக் குடிமகன் அல்லாத நிலையில், போலியான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி அதிகாரிகளை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடவுச்சீட்டு
இந்த மோசடியில் அவருக்கு உதவியவர்கள் யார்? ஏதேனும் இடைத்தரகர்கள் மூலம் இந்த கடவுச்சீட்டு பெறப்பட்டதா? என்பது குறித்துப் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறையற்ற வகையில் கடவுச்சீட்டு பெற்று வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழகம் வருபவர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri