இலங்கை இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோட்டம் : நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15360 பேர் பாதுகாப்பு பிரிவிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இராணுவத்தின் 99அதிகாரிகள், கடற்படையின் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் 15 அதிகாரிகள் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாகும்.
முப்படையினர் தப்பியோட்டம்
மற்ற அணிகளில் உள்ள 15220 பேரில் இராணுவத்தின் 12643 பேரும் கடற்படையின் 1770 பேரும் உள்ளனர். தலைமறைவான அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளிலுள்ளவர்களை கைது செய்வதற்கு ஒரேயொரு பொது மன்னிப்பு காலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமறைவான நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாடு முழுவதும் கொலைகள் மற்றும் கும்பல் நடவடிக்கைகளுக்கு ஒப்பந்தக் கொலையாளிகளாக பாதாள உலக தலைவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை வேலைக்கு அமர்த்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam