இலங்கையின் உலக சாதனை: சர்வதேச ஊடகம் சுட்டிகாட்டு-செய்திகளின் தொகுப்பு
பொருளாதார, டொலர், உணவு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சாதாரண மக்களுக்கான எரிபொருள் விற்பனையை நிறுத்தி இலங்கை உலக சாதனை ஒன்றை படைத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய காலத்தில் தனது மக்களுக்கு எரிபொருள் விற்பனையை நிறுத்திய ஒரே நாடு இலங்கை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையிடம் தற்போது 9 ஆயிரம் தொன் டீசலும் 6 ஆயிரம் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளது. இந்த எரிபொருள் ஒரு வாரத்திற்கு சமாளிக்க மாத்திரம் போதுமானதாக இருக்கும்.
சுகாதாரம், போக்குவரத்து உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே தற்போது எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.எனினும் இதுவும் போதுமான அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்கும் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும் கிடைக்கும் காலத்தை சரியாக கூறவில்லை.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,