போதைப்பொருள் குற்றங்களுக்காக 2700 பெண்கள் கைது: கலால் திணைக்களம்
இலங்கையில் அண்மைக்காலமாக போதைப் பொருள் வர்த்தகம் அதிகரித்து வருவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஏழுமாதங்களில் கலால் திணைக்களம் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் 18,164 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.
கலால் வரிச் சட்டம்
இவற்றில் 14,562 சுற்றிவளைப்புகள் கலால் வரிச் சட்டத்தின் கீழும், அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2801 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே போன்று புகையிலை மற்றும் மதுபான விற்பனைச் சட்டத்தின் கீழ் 801 சுற்றி வளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் பெண்கள்
மேற்குறித்த சுற்றிவளைப்புகளின் போது 15,290 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 2764 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.