குவைத்தில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள இலங்கை பெண்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்டு தனிமையில் விடப்பட்ட தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மனம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனம்பிட்டிய, மஹாவெவ பிரதேசத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர என்பவரே குவைத்தில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு நிரந்தர வீடு கட்டி, மூன்று குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
கணவர் விடுத்துள்ள கோரிக்கை
குறித்த பெண்ணின் குழந்தைகளை அவரது தாயார் பார்த்துக்கொண்டுள்ளதுடன், கணவன் இரும்பு வாளி உற்பத்தியை பகுதி நேர வேலையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் பலவிதமான சித்ரவதைகளை எதிர்நோக்கி வருவதனால், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
