விடுதலைப் புலிகளால் சுவிஸ் அரசிற்கு எழுதப்பட்ட முக்கிய கடிதம்! வெளிவரும் பல தகவல்கள்
“தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு நிகழ்வு” என பொன்ராசா அன்ரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“ இலங்கையின் இறுதி யுத்தம் சாட்சிகள் அற்ற ஒரு யுத்தம்.
உலகத்தில் தடை செய்யப்பட்ட அத்துணை ஆயுதங்களும், குண்டுகளும் பாவிக்கப்பட்ட ஒரு யுத்தம்.
தமிழ் மக்களின் இந்த போராட்டத்தை அழிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மண்ணில் நடந்த நிகழ்வை மட்டுமல்ல, அந்த நிகழ்வின் பின்னால் இருக்கும் ஆவணங்கள் அத்தணையும் அழிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு விடுதலைப்போராட்டம் இருந்ததாக வரலாற்றில் இருக்கக்கூடாது என்பது தான் சர்வதேச உலகத்தின் ஒரு எடுக்கோளாக இருக்கின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.
இவை தொடபில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்,