மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடு! (Video)
நமுனுகுல - கனவரல்ல ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தினால் உறவினர்களிடம் அதற்குரிய காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
26 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை தோட்ட முகாமையாளரின் ஊடாக உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு ஆணைக்குழு
அத்துடன், 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை தோட்ட நிர்வாகத்தினால், இழப்பீட்டு ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளதாக கனவரல்ல தோட்ட முகாமையாளர் சாமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கனவரல்ல தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளம் தொழிலாளியான தமிழரசன் கணேசமூர்த்தி கடந்த மாதம் 9 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மக்கள் போராட்டம்
அவரது இறப்புக்கு நீதிக்கோரி, சடலத்தை தொழிற்சாலையில் வைத்து தோட்டமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, தொழில் அமைச்சர் மற்றும் தோட்ட நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 40 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க பெருந்தோட்ட நிர்வாகம் உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடிய பின் காசோலையை வழங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: திருமால்






திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
