இலங்கையில் மலையகத் தமிழர்களின் எழுச்சிக்காக காத்திருக்கும் தமிழகம் : ஸ்டாலின்
இலங்கையில் மலையகத் தமிழர்களின் கல்வி, சுகாதாரம், வாழ்விடப் பொருளாதார உதவி உள்ளிட்டவற்றில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், இலங்கையில் இடம்பெற்ற நாம் 200 நிகழ்வில், சென்னையில் இருந்து உரையாற்றிய ஸ்டாலின், மலையகத் தமிழர்கள் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் எழுச்சி பெறும் நாளை எண்ணி தமிழ்நாடு காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
மலைநாட்டு தமிழர்களின் வரலாறு
இலங்கையில் மலைநாட்டுத் தமிழர்களின் வரலாறு கோப்பி தோட்டங்களுடன் ஆரம்பமானது.
தேயிலை மற்றும் கோப்பி தோட்டங்களிலும், பின்னர் பணப்பயிர் உற்பத்தியிலும் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கை தமிழக முதல்வர் தமது உரையின்போது கோடிட்டுக் காட்டினார்.
மலையகத் தமிழர்கள் இலங்கையின் வளர்ச்சிக்காக தமது இரத்தத்தையும் வியர்வையும் நேரத்தையும் கொடுத்து உழைத்தார்கள்.
அவர்கள் இலங்கைக்காக தங்கள் உழைப்பைக் கொடுத்தார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
