இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் பேச்சு - பிரதமர் அறிவிப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். சீனாவின் பிரதித் தூதுவர் ஹு வெய்யுடன் பிரதமர் விக்ரமசிங்க இன்று கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் போது, “சீனா கொள்கையை” இலங்கை பின்பற்றுவதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு அரிசி நன்கொடை
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்த சீன துணைத் தூதுவர், உணவு நெருக்கடியைக் குறைக்க சீனா இலங்கைக்கு அரிசியை நன்கொடையாக வழங்குவதாக பிரதமரிடம் மீண்டும் உறுதியளித்தார்.