ஆசிரியைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாடசாலைகளுக்கு வரும் போது புடவை அணியாத பெண் ஆசிரியைகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அழைப்பாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் எச்சரித்துள்ளார். .

சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக அரச ஊழியர்களை வசதியான உடையில் பணிக்கு வருமாறு கூறப்பட்டமையால் அவர்கள் அந்த சுற்றறிக்கைக்கமைய, செயற்பட்டதாகவும் அது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்களும் அரசாங்க ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கும் அதே உரிமை உண்டு.
புடவை அணிவதற்கு யாருக்கும் உரிமை உண்டு எனவும் அது அவர்களின் விருப்பப்படி நடப்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri