தென்னாப்பிரிக்க தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவில்(South Africa )நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இன்று(19.11.2024) இதனை அறிவித்துள்ளது.
தனஞ்சய டி சில்வா தலைமை
இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷித பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜெயசூர்ய, நிஷான் பீரிஸ், லசித் எம்புல்தெனிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த குழாம் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி தென்னாப்பிரிக்காவிற்குப் பயணமாகவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam