நைஜீரியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய முயலும் இலங்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக மசகு எண்ணெய் விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதிரி தயாரிப்புகள்
இதனையடுத்தே, நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மாதிரி தயாரிப்புகளைப் பெற்று, அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளூர் ஆய்வகங்களில் சோதிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
