நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!
சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற்று வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்து அறிவிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்த பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை பரிந்துரைத்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இதன்படி, நிபுணத்துவ குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Finance Minister's comment yesterday (2) re."#SriLanka informing @IMFNews to provide #expert advice on #economic situation" is about a routine Technical Assistance Program on Macro-Fiscal capacity building for MOF's new Macro-Fiscal Unit. Nothing else. @RealBRajapaksa @CBSL #lka
— Ajith Nivard Cabraal (@an_cabraal) February 3, 2022