கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கையின் ஆளில்லா மர்ம படகு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று இன்று (20) காலை கரை ஒதுங்கியுள்ளது.
அப்பகுதி கடற்தொழிலாளர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக கோடியக்கரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரியின் உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த படகில் (OFRP-A-0851 KCH ) என்ற இலக்கம் காணப்படுகின்றது.
குறித்த படகு கடற்தொழிலுக்கா அல்லது கடத்தலுக்கா பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும், இப் படகில் யாராவது வந்தார்களா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கியூ பிரிவு காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
