முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதனின் சோகக் கதை
இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாக முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பினை சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக உள்ளார்.
பாதணிகள்
இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேருந்தில் இருக்கைகள் கிடைக்காவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan