ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடு: சுமந்திரன் அதிருப்தி
ஜெனிவா(Geneva) கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நேற்றையதினம் இலங்கை பிரதிநிதி இலங்கையின் நிலைபாடு தொடர்பில் வெளியிட்ட அறிக்கை என்பவை அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2012ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பொறுப்புகூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு தடைசெய்யும் விதமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்குவோம் என்று கூறிய தேசியமக்கள் சக்தி தற்போது அதனை நீக்குவது சம்பந்தமாகவும் அதற்கு மாற்றீடாக வேறொரு சட்டத்தை இயற்றுகின்றோம் என கூறுகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri