இலங்கையின் வாகன பொருத்துதல் துறை முன்வைத்துள்ள கோரிக்கை!
உள்ளூரில் பொருத்தப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு போட்டி வரி கட்டமைப்பை முன்வைக்குமாறு இலங்கையின் உள்ளூர் வாகன பொருத்துதல் துறை, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளூர் பொருத்துதல் மற்றும் உதிரிபாகங்கள், பாகங்கள் உற்பத்தி என்பன, நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க தூண்களாக மாறியுள்ளன.
இது, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உந்துகிறது, அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கிறது மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்துகிறது.
அந்நிய செலாவணி
தொழில்துறை அமைச்சகத்தின் நிலையான இயக்க நடைமுறையின் கீழ் செயல்படும் இந்தத் துறை, தற்போது மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்யும் 17 க்கும் மேற்பட்ட பொருத்துதல் ஆலைகளைக் கொண்டுள்ளது.
மேலும் 17 முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்கள் செயல்பாடுகளை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர்.இது வலுவான தொழில்துறை வளர்ச்சியைக் குறிக்கிறது.
இந்தத் துறை, 5,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப திறமையான தொழிலாளர்களையும் நேரடியாக வேலைக்கு அமர்த்தியுள்ளது.
இந்த மாற்றம் மதிப்புமிக்க அந்நிய செலாவணி இருப்புகளைப் பாதுகாத்து, உள்ளூர் உற்பத்தியின் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி
ஹ_ண்டாய், டிவிஎஸ், பஜாஜ், மஹிந்திரா, டாடா, லங்கா அசோக் லேலேண்ட், டிஎஃப்எஸ்கே, ஃபோட்டான், ஜேஏசி, ஜேஎம்சி, செரி, புரோட்டான், வுலிங் மற்றும் பிஏஐசி போன்ற உலகளாவிய வாகன உற்பத்தியாளர்கள், இலங்கையில் செயல்பாடுகளை நிறுவியுள்ளன.
இந்த முன்னேற்றம், பிராந்திய வாகன விநியோகச் சங்கிலியில் இலங்கையை ஒரு போட்டியாளராக நிலைநிறுத்தியுள்ளது. இந்த தொழில்துறை, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து வருகிறது.
அதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், வாகனங்கள் மற்றும் கூறுகளை ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே, இறக்குமதி வாகனங்கள் மீதான தற்காலிக இடைநீக்கத்தை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், தொழில்துறை பங்குதாரர்கள், உள்ளூரில் பொருத்துதல், செய்யப்பட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு போட்டி வரி கட்டமைப்பை செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
![கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல்](https://cdn.ibcstack.com/article/e9d02bf5-c3ea-4e31-a56c-044c841fdc6a/25-6785f186b3aae-md.webp)
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 4 நாட்கள் முன்
![பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/1e71779d-b178-4274-ae6f-0160521c3c09/25-678aa79db5275-sm.webp)
பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி Cineulagam
![லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம்](https://cdn.ibcstack.com/article/f5f0413c-f16e-43dd-bac6-963bf7f284be/25-678b526e74cae-sm.webp)
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
![Daily Rasipalan:30 ஆண்டுக்கு பின் உருவாகும் அதிர்ஷ்ட யோகம்- உச்சத்தை தொடப்போகும் 6 ராசிகள்- உங்க ராசி என்ன?](https://cdn.ibcstack.com/article/c43ad9b3-c405-4151-aba9-2da77e0c8a9f/25-678a9ebb3d0ef-sm.webp)
Daily Rasipalan:30 ஆண்டுக்கு பின் உருவாகும் அதிர்ஷ்ட யோகம்- உச்சத்தை தொடப்போகும் 6 ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
![இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்... யார் யார்ன்னு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/69087b9a-ea2c-4e94-b1f5-b2e0147646ea/25-678b4441d6d9f-sm.webp)