ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்! சுமந்திரன்
யுத்தத்திற்கு பின்னரான பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச பார்வை இலங்கை மீது காணப்பட வேண்டுமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
கொண்டுவரப்படவுள்ள தீர்மானம்
மேலும் தெரிவிக்கையில், நாளை மறு தினம் ஆறாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
சென்ற வருடம் இணை அனுசரணை நாடுகள் கொண்டு வரும்போது இலங்கை அரசாங்கம் அதனை எதிர்த்தது. வாக்கெடுப்பு நேரத்தில் வாக்கெடுப்பை கோரவில்லை அது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
இந்த முறையும் இந்த எதிர்பார்ப்பினை இணை அனுசரணை நாடுகள் கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்ட சில திருத்தங்களை கூட மேற்கொண்டுள்ளனர்.
சில வார்த்தை பிரயோகங்களினால் சில நாடுகள் எதிர்த்தால் அது நிறைவேற்றாமல் போனால் அது பாதகமாக அமையும். சிலர் கேட்கின்றனர் இந்த தீர்மானத்தால் என்ன பிரயோசனம் என்று.
வடக்கு, கிழக்கின் பொறுப்பு கூறல்
குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனால் யுத்தத்திற்கு பின்னரான வடக்கு, கிழக்கின் பொறுப்பு கூறல் நல்லிணக்கம் தொடர்பான பார்வை இல்லாது போகும்.
குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரின் பார்வை தொடர்ந்து காணப்படும். தொடர்ச்சியாக குறித்த தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகளுக்கு நன்றி கூறுகின்றோம்.
உள்ளடக்கத்தில் சில எதிரான கருத்துக்கள் உள்ளன. அதனை சுட்டிகாட்டியிருக்கின்றோம். இந்த முயற்சியை கொண்டுவரும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
