கடும் நெருக்கடிக்கும் மத்தியில் 500 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியது இலங்கை!
இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த இறையாண்மை முறி இன்று முதிர்வு காலத்தை எட்டியதை அடுத்தே, 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது கடுமையான டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இதன் விளைவாக பொருட்களை இறக்குமதி செய்வதில் பெரும் சிக்களை அரசாங்கம் சத்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையிலேயே அரசாங்கம் இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.