அடிப்படை உரிமைகளை ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மதிக்க வேண்டும் - சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis President of Sri lanka
By Sivaa Mayuri Nov 24, 2022 09:00 AM GMT
Report

அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளை ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மதிக்க வேண்டும் என சர்வதேச அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பொதுமக்கள் எதிர்ப்புக்களுடன் ஏற்பட்ட வியத்தகு எரிபொருள் பற்றாக்குறை தணிந்திருக்கலாம், எனினும் மில்லியன்கணக்கான இலங்கையர்களுக்கு பொருளாதார நெருக்கடி முன்னெப்போதையும் விட மோசமாகியுள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும், இந்த ஆண்டு வறுமை வீதம் இரட்டிப்பாகியுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளை ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மதிக்க வேண்டும் - சர்வதேச அமைப்பு வலியுறுத்தல் | Sri Lanka Ranil Brink Of Humanitarian Crisis

பற்றாக்குறை

உணவு விலை பணவீக்கம் அக்டோபரில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மேலும் வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல இறக்குமதிகள் பற்றாக்குறையாகவோ அல்லது பெற முடியாததாகவோ உள்ளது.

இந்நிலையில் அமைதியான போராட்டத்தை அதிகாரிகள் ஒடுக்கினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆர்ப்பாட்டங்களை நசுக்கியுள்ளார் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை தடுத்து வைப்பதற்கு இழிவான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்.

அத்துடன் விக்ரமசிங்க மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும், பாரிய எதிர்ப்புக்கள் ஏற்பட்டால் பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதாகவும் எச்சரித்துள்ளார்.

அடிப்படை உரிமைகளை ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மதிக்க வேண்டும் - சர்வதேச அமைப்பு வலியுறுத்தல் | Sri Lanka Ranil Brink Of Humanitarian Crisis

எனினும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை உட்பட மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல், தவறான நிர்வாகத்திற்கோ அல்லது ஊழலுக்கோ அரசியல்வாதிகளால் தீர்வை தரமுடியாது என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச நாடுகள், நெருக்கடியை எதிர்கொள்வதற்கான இன்றியமையாத படியாக மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுமாறு ரணிலின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US