இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி! பாரிய மோசடி நடவடிக்கையுடன் ஜனாதிபதிக்கு தொடர்பு என தகவல்(Video)
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து இன்னமும் அரசியல்வாதிகள் பயந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களுள் ஒருவரான லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தரப்பினர் கடந்த கால ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான வாதங்களை நாடாளுமன்றத்திலும் அரசியல் பரப்பிலும் முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இது குறித்து போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான லஹிரு வீரசேகர கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இளைஞர் யுவதிகள் ஏன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று ஆட்சியாளர்கள் சித்தித்திருந்தால் இதைவிட சிறந்த நாட்டை கட்டியெழுப்பியிருக்க முடியும். ஆனால் இன்னமும் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் தங்களது கருத்துக்கள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்களால் வெளிவர முடியாமல் உள்ளது. இது மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம் தலைத்தூக்கும் காலம். ஆகவே, அவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். முதற்தர போதைப்பொருள் வியாபாரிகள் நாடாளுமன்றத்தில் தான் உள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி பாரிய ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர். அவர் பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
