பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு!: கெமுனு விஜேரத்ன
பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு
பேருந்து துறையினர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை மாத்திரமின்றி உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு பிரச்சினை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளே அதிகளவில் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு தாமதமடைவதால் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் குறித்த உதிரிப்பாகங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு
மேலும், கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.