விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம்: அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்- மா.சத்திவேல் கருத்து (Video)
பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்துதான் இந்த நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,
பயங்கரவாத தடைச்சட்டம்
“வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும். அங்கிருக்கும் மக்களை தம்முடைய அடக்குதலுக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு வடக்கு கிழக்கில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் உக்கிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பயங்கரவாத தடைசட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற நியாயத்தை கற்பிப்பதற்காக வடக்கு கிழக்கிலே விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிலே பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெளிக்கடை சிறைச்சாலையிலும், மெகசின் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு தொகுதியினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள், ஒரு தொகுதியினர் எந்தவிதமான வழக்கும் இன்றி தொடர்ந்தும் மூன்று வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்
இது அவர்களுடைய நீதியை மறுக்கின்ற செயல். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கான விடுதலை அல்லது பிணை வழங்குமாறு கோரி 2020ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எனவே விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்களை கைது செய்வதையும், வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருப்பதையும் தாம் வண்மையாக கண்டிப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
