அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று வரை தீர்வு காணவில்லை: மா.சத்திவேல்

United Nations Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka
By Rakesh Sep 07, 2022 10:43 AM GMT
Report

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிலைநாட்டப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றில் இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கையில் குறிப்பிடுவதாவது,

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தாம் கைதுசெய்யப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை நீதிமன்றத்துக்கு அழைக்காதிருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நியாயம் கோரியும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று வரை தீர்வு காணவில்லை: மா.சத்திவேல் | Release Political Prisoners Datesatthivel

அரசியல் கைதிகளின் விடுதலை

இந்த விடயத்தில் அரசாங்கமும், நீதி அமைச்சும் கவனம் செலுத்தி இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நியாயத்தை நிலைநாட்டுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோளை விடுகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல்படுத்துவதற்கான நியாயத்தைக் கற்பிக்கவும் சர்வதேசத்தை ஏமாற்றும் புலி உருவாக்கம் என அண்மைய காலங்களில் தமிழ் இளைஞர்கள் தொகையாகக் கைதுசெய்யப்பட்டனர்.

சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவும், பயங்கரவாதத் தடை சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்று வெளி உலகத்துக்குக் காட்டவும் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் புலி உருவாக்கும் என கைது செய்யப்பட்டவர்களில் ஒருசிலரை ஆட்சியாளர்கள் பிணையில் விடுவித்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று வரை தீர்வு காணவில்லை: மா.சத்திவேல் | Release Political Prisoners Datesatthivel

மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் எடுக்காது காலத்தை இழுத்தடிப்புச் செய்வது நியாயத்தை மறுக்கும் திட்டமிட்ட செயலாகும்.இதனை அனுமதிக்க முடியாது.

உணவு தவிர்ப்புப் போராட்டம்

இந்த நிலையில் இவர்கள் தமக்கு நியாயம் வேண்டியும், ஒட்டுமொத்த அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவர்களை உணவு தவிப்புப் போராட்டத்தில் இருந்து மீட்குமாறும், உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு விடுதலையை வலியுறுத்துமாறும் கேட்கின்றனர். அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் வாடுவோர் தமது விடுதலைக்காகப் பல தடவைகள் போராட்டம் நடத்தி உள்ளதோடு சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

விடுதலைக்கான போராட்டம்

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி அத்தகைய போராட்டங்கள் கைவிடப்பட்டாலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிலைநாட்டப்படவில்லை. இந்த நிலையில், அவர்கள் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் காலகட்டத்தில் மிக அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை பிணையில் அனுப்பிவிட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கம் நாடகமாடும் வாய்ப்புள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று வரை தீர்வு காணவில்லை: மா.சத்திவேல் | Release Political Prisoners Datesatthivel

இந்த நிலையில் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் இதனைக் கருத்திற்கொண்டு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் விடுதலையாகுவதற்கு கூட்டுச் செயற்பாட்டை முதன்மைப்படுத்துமாறு அரசியல் கைதிகளின் பெற்றோரோடு அரசியல் கைதிகளின் தேசிய அமைப்பும் கேட்டுகொள்கின்றது என குறிப்பிடப்படுகின்றது.  

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US