எனது அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான வற் வரி நீக்கப்படும் : அனுர உறுதி
எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருந்துகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான வற் (VAT) வரியை நீக்கும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் கூடுதல் வாசிப்புப் புத்தகங்கள் மீதான வற் நீக்கப்படும் எனவும், உணவுப் பொருட்களுக்கான வற் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தமது ஆட்சியில் பழிவாங்கப் போவதில்லை என்றும், எனினும், தவறு செய்பவர்கள் மற்றும் மோசடி மற்றும் ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மோசடி, ஊழலை ஒழிப்போம், திருடப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
