தேர்தல் குறித்து ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அநுர
அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்படும் ஜனாதிபதியே பயன்படுத்த வேண்டுமென அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல்
உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும்.
எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே அதனை மேற்கொள்ள முடியும்.
எனவே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வரும் ஒக்டோபர் 17ஆ;ம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால், மக்கள் வீதியில் இறங்குவார்கள் என்று அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
